[23/03, 7:08 pm] makkalvizhipunavurnews: நாட்டுக்கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை அரசு மானியம்..!! தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!
https://bitly.cx/8JLB
[23/03, 7:20 pm] makkalvizhipunavurnews: PM கிசான் பதிவு 2025 – புதிய விவசாயிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

4-அபிஷியல் அப்டேட்
https://bitly.cx/C7lV9

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் எப்படி புகார் அளிப்பது!
நீதிமன்றங்கள் காவல் நிலையங்கள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் அரசு அதிகாரிகளால் செய்யப்படுகின்ற மனித உரிமை மீறல் தொடர்பாக மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அளிக்க புகார் மனு மாடல் இது இதுபோல பாதிக்கப்பட்டு இருப்போர் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
“ஒப்புதலுடன் இணைந்த பதிவஞ்சல்”
அனுப்புநர் :
……………………………… , வயது……………,
த / பெ………………………. ,
…………………………………
……………………………………
……………………………………
செல் :………………………..
பெறுநர் : உயர்திரு.தலைவர் அவர்கள்,
மாநில மனித உரிமை ஆணையம் , திருவரங்கம் மாளிகை , 143.பி.எஸ் . குமாரசாமி ராஜா சாலை ,
கிரீன் வேய்ஸ் சாலை, சென்னை- 600028.
எதிர்மனுதாரர் :
1………………………..
…………………………….
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : மனித உரிமை பாதுகாப்பு சட்டம் 1993 இன் 2(4) வது பிரிவுப்படி மனித உரிமைகள் மீறல் தொடர்பாக முறையீடு.
மனு தாராகிய நான்……………………… மாவட்டம்,…………………. ……….. வட்டம்,………………………… கிராமம், …………………………………………………….. தெரு, …………………….. கதவு எண் என்ற முகவரியில் குடியிருந்து வரும்……………………………………….. என்பவரின் மகன்…………………………………………………..ஆகிய வயது………………………. ஆகிய நான் அகத்தூய்மையோடும்/ உளப்பூர்வமாகவும் /எவ்வித உள்நோக்கமும் இன்றியும் வழங்கும் (அபிடவிட்டு) சத்தியபிரமாணம் யாதெனில்…..
2) கடந்த……………………… தேதியன்று……………………………………. காவல் நிலையத்திற்கு/………………………………… மாவட்ட ஆட்சியர் அலுவலகம் /……………………………………….. அலுவலகத்தில் மனுச் செய்ய சென்றபோது…………………………………………… என்ற பதவியிலுள்ள திரு………………………………என்பவர் ஒருமையில் பேசியும் செய்ய வேண்டிய வேலையை செய்யாமலும் செய்யக்கூடாததை செய்தும் இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் 2 மற்றும் 3வது பிரிவுக்கு முரணாக அதிகார துஷ்பிரயோகம் ஆக செயல்பட்டு வருகிறார். இது பொது மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை செய்ய தவறிய தாகவும்/மனித உரிமை மீறல் குற்றத்தை பகிரங்கமாகவும் செய்துள்ளார். இதற்கு சாட்சிகள் உள்ளது.
3) மேற்காணும் மனித உரிமை மீறல் காரணமாக மிகுந்த மன உளைச்சல் அடைந்து கடந்த…………………………. தேதியில் அரசு /தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக/ வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறேன். மேலும் மேற்காணும் மனித உரிமை மீறல்களை இதே அலுவலகத்தில் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர் இவற்றை என்னால் நிரூபிக்க முடியும்.
ஆகையால் அருள்கூர்ந்து இம்மனுவையே மனித உரிமை பாதுகாப்பு சட்டம் 1993 இன் பிரிவு 24 இல் வகுத்துரைத்துள்ளபடிக்கு மனித உரிமை மீறலுக்கான புகார் மனுவாக ஏற்றுக் கொண்டு மாநில மனித உரிமைகள் ஆணைய விதிகள் – 1997 இன் 25வது வெளியீட்டில் வகுத்துரைக்கப்பட்டவாறு மாண்பமை மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பாக பார்வையில் காணும் வழக்கு தொடர்பான சாட்சியங்களை விசாரிக்க வாய்ப்பு வழங்கி மனித உரிமை பாதுகாப்புக்கான நீதி நடவடிக்கை மேற்கொள்ள ஆவண செய்ய வேணுமாய் மனுதாரால் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கப்படுகிறது.
மனுதார்:
தேதி:
இடம்:

இம்மனு நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் – 1872 இன் 70வது பிரிவு படி இதையே பிரமாணமாக இதில் ……………………… தேதியன்று என்னால் எனது இல்லத்தில் வைத்து கையொப்பம் செய்யப்படுகிறது.
மனுதாரர்:
தமிழகஅரசுதரும்இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி
பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது.
பட்டாவை பொறுத்தவரை மக்கள் எத்தனை வருடம் குடியிருந்தாலும், அந்த சிலம் ஆட்சேபணை இல்லாத நிலம் என்றால் மட்டுமே பட்டா தரும்.
அரசு தற்போது 86000 பேருக்கு பட்டா வழங்க போகிறது.
எனவே இதுபற்றி விதிமுறைகளை முழுமையாக அறிந்தால் பட்டா வாங்குவது எளிதாக இருக்கும்..
இந்தியாவிலேயே மிக வேகமாக நகரமயமாகும் மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. இதன் காரணமாக சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், வேலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், ஈரோடு, நாமக்கல், ஓசூர், கரூர் என தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறக்கிறது.
மக்கள் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி குடியேறுவதை அதிகம் விரும்புகிறார்கள். அப்படி குடியேறுவதன் காரணமாக நகரங்களில் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது.
இப்போது எல்லா நகரங்களிலும் லட்சங்களில் தான் நிலத்தின் மதிப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கோடிகளில் நிலத்தின் மதிப்பு உயருகிறது.
ஏழைகளுக்கு பட்டா தரும் அரசு
அதேநேரம் புலம் பெயர்ந்து வரும் கூலி தொழிலாளர்கள், ஏழை மக்கள் பலருக்கு இன்றைக்கு வீடு, நிலம் சொந்தமாக இல்லை.. அதேபோல் அவர்களால் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து இடம் வாங்குவது என்பது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாத்தியமில்லை.
மற்ற பகுதிகளிலும் இடம்வாங்குவதும் சரி, வீடு கட்டுவதும் சரி மிகவும் கடினமாகே உள்ளது.
30 வருடம், 40 வருடம் முனபு சென்னை உள்பட பல்வேறு நகர்ப்புறங்களில் புறம்போக்கு நிலங்களில் குடியேறிய ஏழை மக்கள்,அந்த நிலங்களுக்கு பட்டா வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டாக்களை ஏழைகளுக்கு அவ்வப்போது வழங்கிவருகிறது.
புள்ளி விவரங்கள் என்ன
புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்கு, இலவச மனைப்பட்டா வழங்கும் திட்டம் கடந்த 2006ம் ஆணடு தொடங்கி தமிழகத்தில் நடைமுறையில் இருக்கிறது.
இதன்படி அரசு துறைகளுக்கு ஆட்சேபனை இல்லாத, நீர் நிலைகள் அல்லாத நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு, 2 சென்ட் வரை இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2023 ஆண்டு வரை, 4.37 லட்சம் பேருக்கு, வருவாய் துறை சார்பில், இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டிருக்கிறது.
இலவச வீட்டு மனை பட்டா பெறுவது எப்படி
பொதுவாக ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலான குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதை அரசு வழங்கமாக வைத்துள்ளது.
அதேநேரம் நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள், கோயில் நிலங்கள் போன்ற ஆட்சேபகரமான ஆக்கிரமிப்பு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு எந்த காலத்திலும் பட்டா வழங்கப்படுவது இல்லை.
அவர்களுக்கு அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் குடியிருப்புகளை கட்டி, அரசு குடியமர்த்துகிறது.
கண்ணகி நகர், செம்மஞ்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் கட்டப்படும் அடுக்குமாடியில் அவர்கள் குடியேற்றம் செய்யப்படுகிறார்கள்.
யார் விண்ணப்பிக்கலாம்
அதேநேரம் ஆட்சேபனை அற்ற நத்தம் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக வசிப்பவர்கள் வீட்டு மனை பட்டா பெற விண்ணப்பிக்க முடியும். ஆனால் பட்டா பெற விண்ணப்பிப்பவர் பெயரில் எந்த வீட்டு மனையும் இருக்கக்கூடாது.
பட்டா வாங்க விரும்புவோர் பெயரில் எந்த சொத்தும் இருக்கக்கூடாது. அத்துடன் ஆக்கிரமித்து குடியிருக்கும் இடத்திற்கான எல்லா ஆவணங்களும் இருக்க வேண்டும்.
இலவச வீட்டு மனை பட்டா பெற தேவையான ஆவணங்கள்
முதல் தகுதி என்னவென்றால் வேறு நிலபுலன் மனை வீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் ஏதும் இல்லாமல் இருப்பதுதான் முதல் தகுதியாகும்.
அடுத்ததாக குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு.. வருமானச்சான்று.. கோட்டா முறையில் பெற சாதி சான்று (குறிப்பிட்ட சாதியினருக்கு வழங்கப்பட்ட நிலங்கள்) உள்பட விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.
எந்த பகுதியில் குடியிருப்புக்கு ஏற்ற அரசு நத்தம் புறம்போக்கு உள்ளது என்பதை அறிந்து அந்த பகுதியை குறிப்பிட்டு மனு அளிக்கலாம்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு போன்றவற்றிற்கும் மனு அளிக்கலாம்.
அரசு தற்போது 86000 பேருக்கு பட்டா வழங்க போகிறது. அதன் விவரங்களையும் பார்ப்போம்.
அரசின் அரசாணையின் படி, “சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சேபனையற்ற நிலங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கலாம்.
மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு 5 ஆண்டுகள் வசித்தால் வழங்கலாம்.
பட்டா பெற வாய்ப்பு உள்ள நிலங்கள்
அதில் ஆட்சேபனை இல்லாத அரசு நிலங்களாக மதிப்பிடப்பட்ட மற்றும் மதிப்பீடு செய்யாத நிலங்கள், கல்லாங்குழி-பாறை-கரடு நிலங்கள், கிராம நத்தம், அரசு நஞ்சை-புஞ்சை நிலங்கள், எதிர்ப்புகள் இல்லாத சிறப்பு அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.
பட்டா கிடைக்காத நிலங்கள்
ஆனால் சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நீர்நிலைகள், மேட்டு நிலங்கள், மேய்ச்சல்-மேய்க்கால், மந்தவெளி நிலங்கள், காடு நிலங்கள், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசுக்கு சொந்தமான நிலங்கள், அனைத்து மத நிறுவனங்களின் பெயரில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் கோவில் புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றுக்கு பட்டா வழக்கப்படாது.
பட்டா பெறும் பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ரூ.3 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால், அவர்களிடம் இருந்து நிலத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
பட்டா பெறுவோருக்கு எவ்வளவு இடம் கிடைக்கும்.
இந்த பட்டா வழங்கும் பணிக்காக மாவட்ட மற்றும் மாநில அளவில் குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் அதிகபட்சமாக 1 சென்ட் பட்டா வழங்க வேண்டும்.
பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் அதிகபட்சமாக 2 செண்டும். கிராமப்புறங்களில் 3 செண்டும் வழங்கப்பட வேண்டும் என்று அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பட்டா விஷயத்தில் அறிய வேண்டிய இன்னொரு முக்கியமான சிக்கல்
சென்னை போன்ற பகுதிகளில் உள்ள நீர் நிலை பகுதிகளில் வசிப்போருக்கு அரசு எந்த காலத்திலும் பட்டா தராது.
அதேபோல் அனாதீனம், வண்டிப்பாதை நீர் வழிப்பாதை, வாய்க்கால், கோயில் நிலங்கள், அறநிலைத்துறை நிலங்கள் போன்ற நிலங்களுக்கு முன்பு பட்டா தராது என்பதால், அதுபோன்ற நிலங்களை யாராவது வாங்கியிருந்து உங்களிடம் விற்க முயன்றால், தப்பி தவறி கூட வாங்கி விட வேண்டாம்.
அப்படிப்பட்ட நிலங்களின் மதிப்பு இப்போது பூஜியம் என்று அரசு மாற்றி வைத்துள்ளது. எனவே நில விஷயத்தில் கவனமாக இருங்கள்.
விவிலியராஜா🥰🤝 வழக்கறிஞர்
9442243433
சந்துகளில்இருந்து
தெருக் களிலிருந்தும்..,
இருசக்கரத்தில் வருபவர்கள்…
1, முக்கியசாலை கடப்பதற்கு முன் மெதுவாக வர வேண்டும், என்ற எண்ணம் இல்லை.
2,வலது பக்கமாக ஏதும் வாகனங்கள் வருகிறதா..,? என்பதை கவனிக்காமல் செல்கிறார்கள்..,
3,வலது பக்க வரும் வாகனங்களின் வேகத்தை தவறுதலாக கணிக்கிறார்கள்…
அதிலும் பலர் வேகமாக வந்து முக்கியசாலையில் நடுரோட்டிற்கு வந்த பிறகுதான் இடது பக்கமாக திருப்பிகிறார்கள்…
4, குறிப்பாக பெண்கள், சிறுவர்கள், பல இளைஞர்கள் பேருந்து செல்லும் பொழுது, இடது புறமாகவே முந்தி செல்கிறார்கள்…
5,அதிலும் பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் போட்டு வரும் வாகன ஓட்டிகள் கவனக்காமல் திரும்புகிறார்கள்…
ஏதோ வீட்டிலுள்ள அறையில் இருந்து மற்றொரு அறைக்கு செல்வது போல…
6,லட்சக்கணக்கில் இருசக்கர வாகனங்கள் வாங்குபவர்கள், 500 ரூபாய் மதிப்புள்ள வலது கண்ணாடி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை, அந்த கண்ணாடியை சரி செய்து கொள்ள வேண்டிய எண்ணமும் பெரும்பான்மை மக்களிடம் இல்லை.
(சமீப காலமாக வலது கண்ணாடி இல்லை என்றால் 500 ரூபாய் அபராதம் போடுகிறார்கள்)
7, ஒருவர் ஓட்டுகையில், அவருடைய அனுமதியில்லாமல், பின் இருக்கையில் இருப்பவர் வலது பக்கம் திரும்புவதற்கு சைகை காண்பித்து, பல பேர் விழுந்துள்ளனர்,
( போக்குவரத்து விதிகளை மதிக்காத பலர், உடல் உறுப்புகளை இழந்த பிறகு தான் பாடம் கற்றுக் கொள்கிறார்கள் )
8, படித்தவர்கள் முதல் அசையும் சொத்து அசையா சொத்து உள்ள பலர் , தங்களுடைய இருசக்கர வாகனங்களுக்கு, இன்சூரன்ஸ் காப்பீடு பற்றி கண்டு கொள்வதில்லை..
9, பகல் நேர குடிகாரர் முதல் ,இரவு நேர குடிகாரர்கள் வரை குறிப்பாக வார இறுதி நாட்கள் குடிகாரர் முதல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் , அவர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்கள் விழுவதும்,காயமடை வதும் அதிகம்,
(குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களைப் பற்றி போக்குவரத்து போலீஸ்காரர்கள், பெரிதாக கண்டு கொள்வதில்லை)
10, சமீப காலமாக சைலன்சர் மாடுலேஷன் செய்து ஓட்டுவார்கள் பற்றி போக்குவரத்து காவலர்கள் கண்டு கொள்வதே இல்லை,
( இதுபோன்ற இருசக்கர சைலன்சர் வரும் சத்தத்தினால் கருவுற்ற சில தாய்மார்கள் கரு கலைந்தது உண்மை)
11, உயிரைக் காப்பாற்றக்கூடிய ஆம்புலன்ஸ் கூட 100 தாண்டி வேகமாக போவதில்லை.
ஆனால் சமீப காலமாக பல இளைஞர்கள் தங்களை காவு கொடுப்பதற்காகவே வேகமாக செல்கிறார்கள்..
விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை வாங்கிக் கொடுப்பது,தன் மகன் ஓட்டுவதும் கவுரவம் என்று பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள், கடைசியில் கொள்ளி போட ஆளில்லை..
இன்னும் சில வீடுகளில் பெற்ற மகன் இல்லை…
உதவாத விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் காட்சி பொருளாக மட்டுமே உள்ளன.
புரிந்து கொண்ட மேன் மக்களுக்கும், அதன் வாரிசு களுக்கும்..,
ஆடம்பரம் அழகல்ல..,
நிதானமே அழகு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *