நீலகிரிநாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உதகை ஒன்றியம், காந்தள், காந்தி நகரில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை இயங்கி வரும் உருது மொழி பேசும் இஸ்லாமிய மக்கள் மேற்படிப்பை தொடர 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேலூருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது என்பதினை மாண்புமிகு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் இராசா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இஸ்லாமிய மக்களினுடைய கோரிக்கையினை ஏற்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் உடனடியாக அலைபேசி வாயிலாக பேசி காந்திநகர் ( உருது) நகராட்சி நடுநிலை ப்பள்ளியினை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்திட ஒப்புதல் பெற்று தந்தமைக்கு உருது பேசும் இஸ்லாமிய மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை அப்பகுதி மக்கள்தெரிவித்தனர்
புனேவில் பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்
மகாராஷ்டிரா – புனேயில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றில், 26-வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த கொடூரத்தை செய்த ராம்தாஸ் காடே என்பவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்றும் 2019 முதல் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது
சம்பவம் நடந்த பேருந்து நிலையம் மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தால் நடத்தப்படும் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும்
மேலும், காவல் நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *