திருப்பூரில்மொபைல் டிஸ்ப்ளே பிக்ஸ் எனும் செல்போன் உதிரிபாக கடை புதிதாக திறந்து உள்ளது, இந்த கடையில் போலியான உதிரிபாகங்களை குறைந்த விலைக்கு தருவதாக பொதுமக்களை ஏமாற்றி விளம்பரங்கள் செய்து வருகின்றனர், இது தொடர்பாக திருப்பூரில் உள்ள 500 க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட கடைக்கு செல்போன் அசோசியேசன் சங்க தலைவரும் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கடைக்காரர்களும் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர் அந்த நேரத்தில் பொதுமக்கள் பலரையும் ஏமாற்றி விற்பனை செய்தது தெரிய வந்தது இதனை அனைத்து கடைக்காரர்களும் கடையை முற்றுகையிட்டு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர், இது குறித்து தெற்கு காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கடையை அடைத்து.இது தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *