நுகர்வோர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது எப்படி?
ஒரு நுகர்வோர் பணம் கொடுத்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் குறைபாடு ஏதேனுமிருப்பின் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கலாம். அதன் மூலம் தவறு செய்தோருக்கு தண்டனையோ, அபராதமோ வாங்கித்தர முடியும்.
நுகர்வோருக்கான நஷ்ட ஈட்டையும் பெற முடியும். இதற்காக 24 டிசம்பர் 1986 அன்று கொண்டுவரப்பட்டது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம். இதன்படி வங்கி, காப்பீடு, நிதி, போக்குவரத்து, பொழுதுபோக்கு, மருத்துவ சேவை, உணவு விடுதி, மின்சாரம் என எந்த விஷயங்களில் நுகர்வோரின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும் நுகர்வோர் மன்றத்தை அணுகலாம். நுகர்வோர் மன்றத்தில் புகாரளிப்பது எப்படி? என்னென்னெ ஆவணங்கள் தேவை ஆகிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நுகர்வோர் என்பவர் யார்?
ஒரு பொருளையோ, ஒரு சேவையையோ பணம் கொடுத்துப் பெறும் யாவரும் நுகர்வோர்களே.
உதாரணமாக: மளிகைக் கடையில் பொருள் வாங்கினாலும், மருத்துவமனையில் காய்ச்சலுக்குப் பார்த்தாலும் நீங்கள் நுகர்வோரே.
யார் / யாரெல்லாம் புகாரளிக்கலாம்?
ஒரு சேவையைப் பெறுகிற, பொருளை வாங்குகிற எந்த ஒரு நுகர்வோரோ, பதிவு செய்த தன்னார்வ நுகர்வோர்அமைப்புகளோ புகார் அளிக்கலாம். தனி நபராகவோ, ஒரே நோக்கம் கொண்ட பல நுகர்வோர்களின் சார்பாக கூட்டாகவோ புகாரளிக்கலாம்.
ஒரு சேவையை அல்லது பொருளை மற்றவர்களுக்கு விற்பதற்காக வாங்குகிற அல்லது மதிப்புக் கூட்டி விற்கிறவர்கள் நுகர்வோர் அல்ல.
ஏன் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்க வேண்டும்?
காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்த்து குறுகிய காலத்திலும், அதே சமயம் அதிக செலவில்லாமலும் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்க எல்லா மாவட்டங்களிலும் நுகர்வோர் மன்றம் செயல்படுகின்றன.
நுகர்வோருக்கு சேவைக்குறைபாடு ஏற்பட்டு அதை கடிதம் வாயிலாக சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவித்தும் அதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்காத பட்சத்தில் நுகர்வோர் மன்றத்தை அணுக வேண்டும்.
எங்கே புகாரளிப்பது?
நுகர்வோர் எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட எல்லைக்குள் இருக்கிறாரோ அங்கே புகாரளிக்கலாம் அல்லது எந்த இடத்தில் பொருள் வாங்கப்பட்டதோ அல்லது எந்த இடத்தில் நுகர்வோர் உரிமை மீறப்பட்டதோ அந்த இடத்திற்குட்பட்ட மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
ஒரு வெள்ளைத்தாளில் (நான்கு நகல்கள்) முழு விவரங்களையும் பதிவு செய்து, இதற்கான அனைத்து ஆவண நகல்களையும் இணைத்து பொருள் மதிப்பிற்குத் தகுந்தவாறு நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் நேரடியாகவோ, பதிவுத் தபால் மூலமாகவோ, தொலைநகல் மூலமாகவோ, விரைவுத் தபால் மூலமாகவோ வழக்குகளைப் பதிவு செய்து, இந்த வழக்கின் நகலை எதிர்த்தரப்பாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு முத்திரைத்தாள் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.
கட்டணம் எவ்வளவு?
1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = Rs. 100 /-
1 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = a200 /-
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = a400 /-
10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = a500 /-
நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கத் தேவையான தகுதிகள்:
புகாரளிப்பவர் நுகர்வோராக இருக்க வேண்டும் அல்லது அவர் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
சேவைக் குறைபாடு அல்லது பிரச்சினை ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்குள் புகாரளிக்க வேண்டும்.
எந்த ஒரு புகாருக்கும் ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?
நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்க ஆதாரங்கள் அவசியம். எனவே எந்த சேவைக் குறைபாடு ஏற்படுகிறதோ அவர்களிடம் முதலில் புகார் செய்ததற்கான ஒளி நகல், பொருள் / சேவை பெற்ற ரசீதுகள், கடிதப் போக்குவரத்துகள் என அனைத்து ரசீதுகளின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சேவைக் குறைபாட்டைப் பொறுத்து ஆதாரங்களின் தன்மையும் வேறுபடும்.
யார் மீதெல்லாம் புகாரளிக்க முடியும்?
நுகர்வோருக்குப் பொருட்களை விற்பனை செய்யும், பணம் பெற்றுக் கொண்டு சேவையை வழங்கும் எந்த நிறுவனத்தின் மீதும் புகாரளிக்க முடியும். அரசுத் துறை, தனியார் துறை என்ற பாகுபாடு கிடையாது.
ஆன்லைனில் புகாரளிக்க:
நுகர்வோர் மன்றத்தை அணுகும் முன் பேச்சுவார்த்தைக்கு அல்லது உடனடி நிவாரணம் கிடைக்க மாநில நுகர்வோர் உதவி மையத்தை அணுகலாம். நுகர்வோர் தனக்கு ஏற்பட்ட சேவைக் குறைபாட்டைக் கூறி அதற்கு ஆலோசனை பெறலாம். பின்னர் இவர்களது வழிகாட்டுதலின் படி நுகர்வோர் மன்றத்தை அணுகலாம்.
மாநில நுகர்வோர் உதவி மையத்தின் தொடர்பு எண் 044 – 2859 2828. இந்த எண்ணுக்கு அழைத்ததும் 9 என்ற எண்ணை அழுத்தினால், புகார்களை தெரிவிக்கலாம். 1 என்ற எண்ணை அழுத்தினால், நுகர்வோருக்கான உரிமைகள் என்ன? நுகர்வோரின் கடமைகள் என்ன போன்ற விவரங்களைப் பதிவு செய்யப்பட்ட குரலில் கேட்கலாம்.
consumer@tn.gov.in, schtamilnadu@gmail.com என்ற மின்னஞ்சலிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை,
4-ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை – 600 005 என்ற முகவரியில் தபாலிலோ, நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். www.consumer.tn.gov.in
விவிலியராஜா👍🤝
வழக்கறிஞர்
9442243433
காவல் நிலையங்களில் வீடியோ எடுக்கலாம்
என மும்பை உயர்நீதிமன்றம்
வழக்கு எண்
Cr WP No 3894/2022, Dated 28.11.2022.
இன்படி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பின் 10 மற்றும் 11 ஆவது பத்திகளில்…
காவல் நிலையங்கள், வீடியோ எடுக்க தடை செய்யப்பட்ட இடங்கள் அல்ல.
மாறாக பொது இடங்கள் ஆகும்.
எனவே வீடியோக்கள் எடுக்கலாம் எனவும்.
காவல் நிலையங்களுக்குள் காவல் நிலைய அதிகாரிகள் நடத்தும் விசாரணைகள்
மற்றும் வாத, விவாதங்களை செல்போனில் வீடியோ எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் காவல் நிலையங்களில் உள்ள ஆவணங்கள் யாவும் நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 74 வது பிரிவுப்படி பொதுவான ஆவணங்கள் என்றும்,
அவற்றை இந்திய குடிமகன் எவர் ஒருவரும் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும்
மத்திய தகவல் ஆணையம், நியூ டெல்லி, வழக்கு எண்.CIC/DS/A/2013/001754/SA என்ற வழக்கின் தீர்ப்புரையில் உறுதி செய்துள்ளது.
மனுதாரர் கோப்புகளை/ஆவணங்களை ஆய்வு செய்ய வரும் போது கூட ஒரு நபரை அனுமதிக்க வேண்டும்.
என்று மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது
:2 (CIC/SG/AN/2009/000601/3306) .
மனுதாரர் கோப்புகளை பார்வையிட தேவையான உதவிகளையும் பொதுத் தகவல் அலுவலர் செய்திட வேண்டும் என்று
மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. (:CIC/WB/C/2006/00174 DATE: 10.04.2006).
மனுதாரர் கள ஆய்வு செய்ய வரும் போது வீடியோ எடுத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை என்று
மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது (CIC/WB/A/2006/00144).
மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலக
பொது தகவல் அலுவலர், அலுவலக கடித
ந.க.எண்/ த.அ.உ.ச.கூகா. (த.இ)/2024 நாள்: 07.2024. இன் படி கிழக்கு காவல் நிலையத்தில்
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 2(J) இன் படி
கள ஆய்விற்கு அனுமதி வழங்குதல் தொடர்பாக
கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு
கள ஆய்வு செய்ய தங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
1)கள ஆய்வின் போது தாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 கீழ் கோரியுள்ள தாங்கள் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் சம்பந்தமான கோப்புகளை மட்டுமே கள ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
2)தாங்களுக்கு தொடர்பில்லாத ஆவணங்களை கள ஆய்வு செய்ய தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
3)கோப்புகளின் பாதுகாப்பு கருதி தங்களுடன் ஒரு காவலர் இருப்பார்.
4)கள ஆய்வின் போது தாங்கள் தொடர்புடைய ஆவணங்களை மட்டுமே கள ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
5)தங்களுக்கு தொடர்பில்லாத மூன்றாம் நபர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை கள ஆய்வு செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது.
6)கோப்புகளை பார்வையிடும் போது பணியிலிருக்கும் காவலர்களிடம் எந்தவித வாக்குவாதத்திலோ அல்லது விவாதத்திலோ ஈடுபடகூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
7) மேலும் மனுதாரர் விண்ணப்பத்தில் ஆய்வின்போது உடன் ஒரு நபரை வைத்து கொள்ள மற்றும் அனுமதி கோரியிருந்தார்.
உடன் ஒரு நபரை அழைத்து வர மற்றும் களஆய்வு செய்யும் போது வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க த.அ.உ.ச 2005ல் எந்தவித சட்ட நடைமுறைகளும் இல்லை. என்று கூறி ….!!!
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 2 (j) இன் கீழ் கள ஆய்விற்கு அனுமதி அளித்திருப்பது
(பணியில் வெளிப்படை தன்மை குறித்தோ மற்றும் அவர்கள் பொறுப்புடைமை குறித்தோ மற்றும் ஊழலை ஒழிப்பது குறித்தோ அல்லாமல்)”
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நீர்த்து போகச் செய்யவும்…
காவல் நிலையங்களில் தகவல் கோரும் RTI ஆர்வலர்களுக்கு மறைமுகமாக கொடுக்கும் மிரட்டலே ஒழிய வேறென்னவாக இருக்க முடியும்.
🙏This is also a great help…….
தொடர்பு எண் – 080 47104600
மனித உயிர்களுக்கு ஆபரேசன் பல லட்சம் செலவாகும் என்ற நிலை வரும்போது தலை சுற்றி கண் கலங்கி, “கடவுளே எங்களுக்கு ஏன் இந்த சோதனை?” என்று குழம்பாமல்
பெங்களூர் ஸ்ரீ சத்யா சாய் பொது மருத்துவமனை ஒயிட் பீல்டு எண்ணுக்கு கால் செய்தால் முதலில் கம்ப்யூட்டர் வாய்சில் உங்கள் எண் பதிவாகி விடும்.
அடுத்து அவர்களே கால் செய்து நமது விருப்ப மொழியிலேயே என்ன உடல்நலகுறைபாடு, அதன் சம்பந்தமான டெஸ்ட் ரிப்போர்ட் என்ன உள்ளது, என்பதை கேட்டு அங்குள்ள வரிசைப்படி உங்களுக்கு “அப்பாயின்ட்மென்ட்” உங்கள் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வரும்.
அதன் விபரப்படி நோய்வாய்ப்பட்டார் உடன் ஒரு “அட்டண்டர்” மட்டுமே கேட்டில் அனுமதிப் பார்கள்.
அந்த தேதி முதல் உங்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் ஆலோசனை அறிவுரை கிடைக்கும்.
ஒரு பைசா செலவில்லாமல் சிகிச்சை ஆபரேசன் தேவையென்றால் “அட்மிஷன்” செய்து நோயாளிக்கு மட்டும் உணவு மருந்து அனைத்தும் அவர்களே இலவசமாக உலகத் தரத்தில் செய்வார்கள்.
இது மருத்துவமனை அல்ல கோவில்.
இதனுள் நமக்கு அட்மிஷன் கிடைத்துவிட்டால் அவர்களுக்கு மறுபிறவி.
மற்றுமொரு விசயம் –
இதன் அருமை களை அதிகமாக வங்கதேசம் ஒரிசா கல்கத்தா நேபாள் பீகார் என்று வர போக 10 தினம் ஆகும் தூரத்திலிருந்து பயனடைபவர்களே.
அதிகம் நம் பக்க மாநிலம் தமிழ்நாடு கேரளா ஆந்திரா ஏன் உள் மாநிலம் கர்நாடகா மக்கள் வெறும் 5 சதவிகித மக்களே
🙏எனவே இதை பார்க்கும் நம் அன்பர்கள் இத்தகவலை தங்கள் குழுவில் பகிர்ந்து உங்களால் பலரும் அதைப் பார்த்து பயன் அடைந்தால் அது நீங்கள் அவர்களுக்கு வாழ்க்கைக்கு செய்யும் பெரிய உதவி🙏
நாம் பிறருக்கு பணம் காசு கொடுப்பது மட்டுமே உதவிஅல்ல.
இதுபோன்ற
உண்மையான நல்ல விசயங்களை பகிர்வதும் புண்ணியமே
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏
திருச்சி, பால் பண்ணை அருகே போதைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக பாலக்கரை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓட முயன்றது. அப்போது அவர்களை துரத்திச் சென்ற காவல் துறையினர் அந்த கும்பலை சேர்ந்த ஒரு நபரை கைது செய்தனர்.
2000 போதை மாத்திரைகள் பறிமுதல்
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் உறையூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் சாதிக் என தெரியவந்துள்ளது. மேலும் அவரிடமிருந்து 2000 போதை மாத்திரைகள், மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் போன்றவையும் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
!தப்பியோடிய நபர்களுக்கு வலைவீச்சு
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை சிறையிலடைத்தது. மேலும் தப்பியோடிய 3 குற்றவாளிகளையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி நகரில் சமீபத்தில் அதிகரித்து
திருச்சி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபஸ்டின், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் குழுவினர் 6-வது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.45 மணிக்கு மேற்கு வங்காள மாநிலம் கவுராவில் இருந்து சென்னை வழியாக வந்த கவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடைந்தது.
அந்த ரயிலில் இருந்து இறங்கி பயணிகளிடம் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை இட்டனர். அப்போது, ரயிலில் இருந்து இறங்கிய ஒரு நபர், போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து நழுவ முயன்றார். இதை கண்ட ரயில்வே போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அதிரடியாக அந்த நபரை, அவரது உடமைகளை சோதனையிட்டனர்.
அப்போது, அவர் வைத்திருந்த பையில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்த முழு பணத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை எண்ணியபோது, அதில், மொத்தம் ரூ.75 லட்சம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர், ஆரோக்கியதாஸ் (வயது 49) என்பதும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த பணஙட ஹவாலா பணம் என தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள், வருமான வரித்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வருமான வரித்துறை துணை இயக்குனர் ஸ்வேதா மற்றும் அதிகாரிகள் வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பணம் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து ஆரோக்கியதாஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி ரெயில் நிலையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *